புதன், 12 ஜூன், 2013

S.P.பட்டிணம் கிளை-தர்பியா

08.06.2013 மற்றும் 09.06.2013 சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் SP.பட்டிணம் கிளை சார்பாக தாவா செய்வது எப்படி என்ற தலைப்பில் தர்பியா ராமநாதபுரம் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நடைபெற்றது.இரண்டு தினங்கள் நடந்த இந்த தர்பியாவில் மாநில பேச்சாளர்கள் கோவை.அப்துல் ரஹீம்,அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி,தாங்கள்.ஹபிபுல்லாஹ் மற்றும் அப்துல் காதர்,மஹ்தூம்,அர்சத் அலி,யாசிர் இம்தாதி ஆகியோர் பயிற்சி அளித்தார்கள்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் SP.பட்டிணம் கிளை சகோதரர்கள் செய்திருந்தார்கள்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! 

கருத்துகள் இல்லை: