ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பனைக்குளம் தெற்கு கிளை -வாழ்வாதார உதவி







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்(தெற்கு) கிளை சார்பாக     11-12-13 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக        RS:7000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.   



வியாழன், 12 டிசம்பர், 2013

பனைக்குளம் தெற்கு கிளை -ஆட்டோ விளம்பரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்(தெற்கு) கிளை சார்பாக சிறைசெல்லும் போராட்டம் சம்பந்தமாக10-12 2013 அன்று 10  ஆட்டோ விளம்பரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.  


திங்கள், 9 டிசம்பர், 2013

தங்கச்சிமடம் கிளை -சிறை செல்லும் போராட்டம் ஸ்டிக்கர்


தங்கச்சிமடம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சிறை செல்லும் போராட்டம் ஸ்டிக்கர்  வாகனங்களில் ஒட்டப்பட்டது .

கீழக்கரை தெற்கு கிளை -பெண்கள் பயான்


 கீழக்கரை தெற்க்கு கிளை சார்பாக 07.12.2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரி:ஹமீதா ரைஹான அவர்கள் 
சகாபிய பெண்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .இதில் நாற்பதறக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .

கீழக்கரை தெற்கு கிளை -மருத்துவ உதவி



அல்லாஹ் வின் மாபெரும் கிருபையினால் 05.12.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் சார்பாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட சகோதரரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி,TNTJ,TNTJ ssb klk,தெற்க்கு கிளை,தெற்க்கு தெரு,கீழக்கரை

எஸ்.பி.பட்டிணம் கிளை -சிறை செல்லும் போராட்ட பேணர்



எஸ்.பி.பட்டினம் கிளை சார்பாக 06.12.2013  சிறை செல்லும் போராட்டம் பிளக்ஸ்

10-6 ல் இரண்டு பேருந்து நிறுத்தத்தில் மக்களின் பார்வைக்கு 

வைக்கப்பட்டது

பெரியபட்டினம் கிளை -பொருளாதார உதவி


பெரியபட்டினம் கிளை சார்பாக 06.12.2013 ஏழ்மை நிலையிலிருந்த ஒரு சகோதரருக்கு அவருடைய சொந்த ஊரான திருநெல்வேலி செல்வதற்கு பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டது

பனைக்குளம் வடக்கு கிளை -அவசர இரத்த தானம்


பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 06.12.2013 அன்று ஒரு சகோதாரிக்கு B POSSITIVE இரத்தம் வழங்கப்பட்டது

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நரிப்பையூர் கிளை -தெருமுனை பிரச்சாரம்

நரிப்பையூர் கிளை சார்பாக 02.12.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் முகம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

பனைக்குளம் வடக்கு கிளை-செயல்வீரர் கூட்டம்

பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 05.12.2013 அன்று  செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது .இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

பனைக்குளம் தெற்கு கிளை-மருத்துவ உதவி





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை  சார்பாக ஏழ்மையான நிலையில் உள்ள ஒரு சகோதரருக்கு04-12-2013 அன்று  மருத்துவ உதவியாக RS:1000 வழங்கப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்
   

சனி, 23 நவம்பர், 2013

நரிப்பையூர் கிளை-கேள்வி பதில் நிகழ்ச்சி

நரிப்பையூர் கிளை சார்பாக 23.11.2013 அன்று மாணவர்களுக்கான் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முகம்மது அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

எஸ்.பி.பட்டிணம் கிளை-சிறை செல்லும் போராட்ட பேணர்

ஜனவரி 28 சிறை செல்லும் போரட்டதிற்க்கு மக்களை அழைக்கும்

வன்னமாக நம் சமுதாயத்தின் முன்னோர்கள் நமது நாட்டிற்க்கு

சுதந்திரம் கிடைப்பதற்க்காக ஒரு சில தியாகங்களை சுட்டிக் காட்டி

பிளக்ஸ் பேணர் மூலம் காட்சிக்காக நூர் பள்ளி முன்பாக சுமார்

எட்டு பேனர்கள் 21.11.2013  வைக்கப் பட்டது.

வியாழன், 21 நவம்பர், 2013

இராமேஸ்வரம் கிளை-இணைவை​ப்புக்கு எதிரான தாவா

 
19.11.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக  இணைவைப்புக்கு எதிரான தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம், பாரதி நகர்,  சல்லிமலை பகுதியின்  தெருவை சேர்ந்த ஒரு வீட்டில் பாதுகாப்புக்காக (?) கட்டப்பட்டிருந்த பொட்டணத்தை அதன் தீமையை எடுத்துக்கூறி அறுத்து எறியப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

சின்னக்கடை கிளை-சமுதாயப்பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னக்கடை கிளை சார்பாக 19.11.2011 அன்று அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரர் ஒருவரை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

வெளிப்பட்டிணம் கிளை – வாழ்வாதார உதவி:


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 20.11.2011 அன்று பாத்திமா ஜொஹரா என்ற விதவை பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய்.5500/- தையல் இயந்திரம் ஒன்று தோல் விற்று பெற்ற தொகையில் இருந்து வழங்கப்பட்டது.

வெளிப்பட்டிணம் கிளை – மருத்துவ உதவி:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 20.11.2011 அன்று மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட வாணியை சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரருக்கு ரூபாய்.10000/- தோல் விற்று பெற்ற தொகையில் இருந்து வழங்கப்பட்டது.

செவ்வாய், 19 நவம்பர், 2013

பனைக்குளம் வடக்கு கிளை-உள்ளரங்கு பயான்

பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 16.11.2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் அப்துல்லாஹ் அவர்கள் குர்ஆனுடன் தொடர்பு வைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றுனார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

சக்கரகோட்டை கிளை-தெருமுனை பிரச்சாரம்

சக்கரகோட்டை கிளை சார்பாக 17.11.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் லக்கி அப்பாஸ் அவர்கள் தலாக் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திங்கள், 18 நவம்பர், 2013

ராமேஸ்வரம் கிளை-மாணவி​களுக்கு 19வதுவார மனன பயிற்சி வகுப்பு


17-11-2013 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனி ஒரு  இடத்தில் குர்ஆன், ஹதீஸ், தூஆ மனன வகுப்பு வாரவாரம் நடந்து வருகிறது. அதில் இந்த வாரத்தில் 14 மாணவிகள்  கலந்துகொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்
 

بسم الله الرحمن الرحيم

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமேஸ்வரம் கிளை

மாணவிகளுக்கு குர்ஆன்,ஹதீஸ்,துஆ மனன வகுப்பு

தேதி: 17-11-2013 ஞாயிற்றுகிழமை

19வது வாரம்

தேர்வு எழுதுவது 17வது பாடம்

பாட தலைப்பு : தொழுகை - 4

தேர்வு எழுதியவர்கள்

14 மாணவிகள்

அடுத்த வார 18வது மனன பாடம்

பாட தலைப்பு : தொழுகை - 5

பரிசு பெறுபவர் விபரம்

முதல் பரிசு

தவ்ஹீதா

இரண்டாம் பரிசு

ஹிதாயா

மூன்றாம் பரிசு

மஃப்ரிதா


 

மாவட்டத் தலைமை-பாம்பன் கிளை ஆய்வு

மாவட்ட தலைமை சார்பாக
17.11.2013 ஞாயிற்றுகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாம்பன்  கிளையின் மர்கசில்  மாவட்ட  நிர்வாகிகளான  தலைவர்   சுலைமான், துணை தலைவர் நஸ்ருதீன்,பொருளாளர் சித்திக், துணை செயலாளர்  நரிப்பையூர் சுலைமான்,அஜ்மல்கான் ஆகியோர்  கிளை ஆய்வு செய்தனர். அதில்  கிளை கணக்கின்  பராமரிப்புகளை சரிபார்த்தல், கிளையின் செயல்பாடுகளை கேட்டறிதல்,கிளைகளுக்கு மாவட்டத்தின் மேல் உள்ள குறைபாடுகளை கேட்டறிதல் நடைபெற்றது.  மேலும் தாவாக்களை அதிகப்படுத்தவும், ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வேலைகளை  வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 

பெரியபட்டிணம் கிளை புதிய நிர்வாகிகள்

பெரியபட்டிணம் கிளை சார்பாக 1.11.2013 அன்று கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1.தலைவர்:செய்யதலி-8148168968
2.செயலாளர்:முகம்மது ரஃபீக்-7200290697
3.பொருளாளர்:இஸ்மயீல்-9786651456
4.துணைத் தலைவர்-ஆசாத்-8148534394
5.தொண்டரணி-காசிப்-8148169049
6.மாணவரணி-இப்ராகிம்-8015029661
7.மருத்துவரணி-சதாம் ஹுஸைன்-7418325928

புதுமடம் கிளை-திருக்குர்ஆன் விளக்கவுரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை சார்பாக 17/11/2013 இன்று மஹ்ரிபிர்க்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது.இதில் சகோ. அமினுல்லாஹ் உரையாற்றினார்கள்.
இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்... அல்ஹம்துலில்லாஹ்..!

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கீழக்கரை தெற்கு கிளை-பொருளாதார உதவி

கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 17.11.2013 அன்று ஏழ்மையான சகோதரி ஒருவருக்கு ரூபாய் 2000.00 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பாலைக்குடி கிளை-பெண்கள் பயான்

திருப்பாலைக்குடி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  17.11.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் உரையாற்றினார்கள் ஆண்களும் பெண்களும்  80 நபர்கள்  கலந்து கொண்டு பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்..

தேவிப்பட்டிணம் கிளை-தெருமுனைப் பிரச்சாரம்

தேவிப்பட்டிணம் கிளை சார்பாக 17.11.2013 அன்று சமுதாய விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அர்சத் அலி மற்றும் பக்கீர் முகம்மது அவர்களும் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆற்றாங்கரை கிளை-பெண்கள் பயான்

ஆற்றாங்கரை கிளை சார்பாக 17.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்

  
16.11.2013 சனிகிழமை அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் இஸ்மாயில் அல்தாபி அவர்கள் இறைவனின் கருணையும் கோபமும் என்ற தலைப்பில்   உரையாற்றினார். இதில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

பனைக்குளம் தெற்கு கிளை-அவசர இரத்த தானம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை சார்பாக    15-11-2013 அன்று இரவு 9 மணிக்கு  கனகமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  மாற்று மத ஏழை சகோதரர் ஒருவருக்கு       AB-(negative) ஒரு யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


வெள்ளி, 15 நவம்பர், 2013

பனைக்குளம் வடக்கு கிளை-உள்ளரங்கு பயான்

பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 12.11.2013அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் அபூபக்கர் என்ற சகோதரர் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


வியாழன், 14 நவம்பர், 2013

சக்கரகோட்டை கிளை-பெண்கள் பயான்

சக்கரகோட்டை கிளை சார்பாக 10.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி ருபினா அவர்கள் உரையாற்றினார்கள்.50 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பனைக்குளம் தெற்கு கிளை-தாயத்து அகற்றுதல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை சார்பாக    12-11-13 அன்று ஒரு சகோதரருக்கு தாயத்து அணிவதின் தீங்கை எடுத்து கூறி அவர் அணிந்திருந்த தாயத்து கழற்றி எறியப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்         

பனைக்குளம் தெற்கு கிளை-சுவர் விளம்பரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை சார்பாக    13-10-2013 அன்று "சிறை செல்லும் போராட்டம் " சம்பந்தமாக 11 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ். 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

காணவில்லை!காணவில்லை!

 மேற்க்கண்ட புகைபடத்திலுள்ள வாலிநோக்கத்தைச் சேர்ந்த ரூஹுல்லாஹ் அவர்களின் மகன் முகம்மது உதைபா (வயது 14. படிப்பு 9 ம் வகுப்பு
)என்ற பையனை 21.10.2013 முதல் சாயல்குடி பஸ்நிலையத்திலிருந்து காணவில்லை.இவரை பற்றி தகவல் அறிந்தால்.இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்:9894123210.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மாவட்டம்-இஸ்லாமிய புத்தக ஸ்டால்

இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 05.10.2013 அன்று புதிய பஸ் நிலையம் அருகில் இலவச இஸ்லாமிய புத்தக ஸ்டால் போடப்பட்டது.இதில் இஸ்லாம் அல்லாத சகோதர,சகோதரிகளுக்கு புத்தகங்கள் மற்றும் CD-க்கள் துண்டு பிரசுரம் இலவசமாக கொடுக்கப்பட்டது.
இந்துக்களுக்கும் கிருஸ்த்துவர்களுக்கும் தனித்தனியாக இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களுக்கு மாவட்ட துணைச்செயலாளர் யாசிர் அரபாத் அவர்கள் தெளிவாக விளக்கமளித்தார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இந்த புத்தக ஸ்டால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று சந்தோசப்பட்டு கூறிவிட்டு சென்றார்கள்.இதில் மாமனிதர் முகம்மத (ஸல்)அவர்கள் புத்தகத்தை கேட்டு வாங்கி சென்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.இதில் மாவட்ட பொருளாளர் சித்திக்,மாவட்ட துணைத் தலைவர் நசிருதீன்,மாவட்ட துணைச் செயலாளர் ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.மாவட்ட தொண்டரணி செயலாளர் லுக்மான் அவர்கள் தொண்டர்களை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


1.அர்த்தமுள்ள இஸ்லாம்-30
2.மாமனிதர் 50
3.குற்றச் சாட்டுகளும் பதில்களும்-30
4.இயேசு இறை மகனா-30
5.இதுதான் பைபிள்-30
6.சத்ய மார்க்கம்-30
7.மனிதனுக்கேற்ற மார்க்கம்-30
8.வருமுன் உரைத்த இஸ்லாம்-30
9.இயேசு சிலுவையில் அரையப்படவில்லை-30.
10.பைபிளில் முகம்மது(ஸல்)அவர்கள்-30
11.அற்புத விழாக்களில் நடப்பெதன்ன-25
12.என்னை கவர்ந்த இஸ்லாம்-100 
13.கர்த்தரின் அறிவுரைகள்-1000
14.யார் இவர்-1000
15.இஸ்லாமும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்-1000
போன்றவைகள் புத்தக ஸ்டாலி கொடுக்கப்பட்டன்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மண்டபம் கிளை-தையல் மிஷின் உதவி

மண்டபம் கிளை சார்பாக 25.09.2013 ஜகாத் நிதியிலிருந்து பர்வின் என்பவருக்கு ரூபாய் 6000.00 மதிப்புள்ள தையல் மிசின் வழங்கப்பட்டது.

சக்கரகோட்டை கிளை-ஜகாத் உதவி

25.09.2013 அன்று சக்கரகோட்டை கிளை சார்பாக சீனி முகம்மது என்பவருக்கு ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 5000.00 வழங்கப்பட்டது.